தஞ்சையில், டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய விழாவில் மைக் பிடித்த அமைச்சர் வைத்திலிங்கம், தன் பேச்சுக்கு கை தட்டாத விவசாயிகளைப் பார்த்து, ""உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? நீங்களெல்லாம் உணர்ச்சியற்ற பிண்டங்களா?'' என்று கேவலமாகப் பேசிய பேச்சு... விவசாயி கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பலைகளை உருவாக்கிவிட்டிருக்கிறது.
""விவசாயக் குடும்பத்தில் பிறந்த அமைச்சர் வைத்திலிங்கத்தால், விவசாயிகளை இப்படி அசிங்கப்படுத்த எப்படி முடிந்தது? உலகத்தின் அச்சாணி என்று வையமறை வள்ளுவரால் ஏற்றிப் போற்றப்பட்ட விவசாயிகளை அறிவற்றவர்கள், உணர்ச்சியற்ற பிண்டங்கள் என்று பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்கு அவருடைய தலைமை கண்டிக்கப் போகிறதா இல்லையா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்'' என்கிறார் பட்டுக்கோட்டை விவசாயி வீரசேனன்.
""அய்யோ... அன்னைக்கு அமைச்சர் பேசிய பேச்சைக் கேட்டு நாங்க எல்லாரும் ஆடிப்போய்விட்டோம்'' என்கிறார்கள் பிரகலாதன், பூஜை மணி, சுப்பிர மணி.
""7-ஆம் தேதி தஞ்சையில் நடக்கும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளப் போகிறாராம் ஜெயலலிதா. விவசாயிகளை இழிவுபடுத்திய அமைச்சர் வைத்திலிங்கத்தின் பேச்சுக்குப் பதில் சொல்லிவிட்டுத்தான் அவர் இந்த பாராட்டு விழாவுக்கு வரவேண்டும். விவசாயிகளை அரசும் அமைச்சர்களும் மதிக்கவில்லையே என்பதையே அமைச்சரின் பேச்சு காட்டுகிறது'' என்று குமுறினார் விவசாய சங்கம் சுவாமிமலை சுந்தர விமல நாதன்.
அமைச்சர் வைத்திலிங்கத் தின் பேச்சைக் கண்டித்து, தஞ்சைக்கு வரும் ஜெ.க்கு கருப்புக் கொடி காட்டுவதற்கான தீவிரத் திலும் சில விவசாய அமைப்பு கள் ஈடுபட்டுள்ளன.
-இரா.பகத்சிங்