nakeeranஅதுபோலவே சாந்தியும், "எனது தொகுதி மக்களின் கோரிக்கை களுக்காக முதல்வரை சந்தித்தேன். அரசின் மக் கள் நலத்திட்டங்கள் என் தொகுதிக்கு கிடைக்க வேண்டும். தொகுதி வளர்ச்சி பற்றி முதல்வ ரிடம் பேசுவதற்கு கட்சியின் அனுமதி தேவை யில்லை' என்று மே 29-ந் தேதி கோட்டையில் ஜெ.வை சந்தித்துவிட்டுத் திரும்பிய சாந்தியும் பேட்டி கொடுத்தார். அதற்கு மேல், அவர் ஊடகங்களிடம் பெரிதாக எதுவும் பேசவில்லை.
""அரசியலில் பெண்களின் பங்கு கூடுத லாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் எந்த முகவரியும் இல்லாமல் ஒரு கிராமத்தில் ஜெராக்ஸ் கடை வைத்திருந்த சாந்திக்கு 2006-லும் 2011-லும் சீட் கொடுத்தார் கேப்டன். அவரால் சட்டமன்றத்திற்கு அனுப்பப்பட்ட சாந்திதான் இப்போது அ.தி.மு.க.விடம் விலை போயிருக்கிறார். அவர் அ.தி.மு.க.வுடன் தொடர்பில் இருக்கிறார் என நக்கீரனும் அம் பலப்படுத்தியிருக்கிறது. மைக்கேல் ராயப்பனும் தொடர்பு கொண்டிருந்தார் என்பதும் தெரியும். அதனால் எங்களுக்கோ கேப்டனுக்கோ எந்த அதிர்ச்சியும் இல்லை.
இதே சாந்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கோரிக்கை பற்றி மூன்று முறை சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். அதை யெல்லாம் ஜெ. தீர்த்து வைத்துவிட்டாரா? அவர் எப்படி தொகுதி மக்களின் கோரிக்கை களை நிறைவேற்றி வைப்பார்? சட்டமன்றத்தில் ஜெ. தன்னைப் பார்த்து முறைப்பதாகக் கூறி அவரைத் தனிப்பட்ட முறையில் எங்களிடம் விமர்சித்தவர்தான் இந்த சாந்தி. இப்போது 5 கோடி அவருக்கு விலை பேசப்பட்டதால், அங்கு சென்றிருக்கிறார். இதில் அமைச்சர் தங்கமணி தான் அதிகம் செலவு செய்தாராம். எங்களைப் பொறுத்தவரை, கட்சியில் உள்ள அழுக்குகள் கழுவப்படுகின்றன''’என்றார் சந்திரகுமார் சூடாக.
நீண்ட முயற்சிக்குப் பின் சாந்தியை தொடர்பு கொண்டோம். ""சட்டமன்றத்தில் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகளே நிறை வேறாத நிலையில் ஜெ.விடம் நேரில் கோரிக்கை வைத்திருக்கிறீர்களே?'' என்றதும், ""உடனடியாக எல்லா நடவடிக்கையையும் எடுத்திட முடியுமா? கால அவகாசம் தேவைப்படத்தானே செய்யும்'' என்றவரிடம், "ஜெ.வை விமர்சிச்சீங்களாமே?' என்றதும், ""அப்படியெல்லாம் இல்லை'' என்ற துடன், ""என்னை தே.மு.தி.க.விலிருந்து இன்னும் விலக்கவில்லை'' என் றார். 5 கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்ட தாக... என நாம் சொல்லத் தொடங் கியதுமே, போனை கட் செய்து விட்டார் சேந்த மங்கலம் சாந்தி.