புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2013

கொமன்வெல்த்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார் ஜெயலலிதா
கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட இந்தியா கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா. 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, தலைமைச் செயலக சட்டப்பேரவை மன்ற மண்டபத்தில் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில், கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட இந்தியா கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா.
அந்த தீர்மானத்ததில் உள்ள வாசகம் வருமாறு:-
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
பெயரளவில் கூட பங்கேற்க கூடாது என்று இந்த பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம்.
ஆனால், மத்திய அரசு அதை ஏற்காதது தமிழர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கொமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பார் என்ற மத்திய அரசின் முடிவு மனவேதனை அளிக்கிறது.
கொமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக அடுத்த 2 ஆண்டுகளுக்கு இலங்கை அதிபர் நீடிக்கவும், வழிவகை உண்டாக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தியா கொமன்வெல்த் மாநாட்டை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தீர்மானித்தை முன்மொழிந்தார்.
இதையடுத்து இந்த தீர்மானம் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களின் விவாதம் நடந்து வருகிற

ad

ad