புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2013

வைகை ரயிலை மறிக்கிறார் வைகோ!
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது என்றும், காமன்வெலத் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் அனைத்துக்கு கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த கோரிக்கையை முன்வைத்து செவ்வாய்க்கிழமை ரயில் மறியல் மற்றும் முழு அடைப்பு போராட்டமும் நடைபெறுகிறது.

மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை டெல்லி சென்று சென்னை திரும்பிய வைகோ, ரயில் மற்றும் விமானத்தில் டிக்கெட் கிடைக்காததால், சென்னையில் இருந்து மதுரைக்கு காரில் சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை நோக்கி புறப்படும் வைகை ரயிலின் முனபு மறியல் செய்து போராட்டம் நடத்த உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

ad

ad