நாடாளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் எதிர்க்கட்சி - அமைச்சர்களை நியமிப்பதில் சிக்கலை எதிர்நோக்கும் மஹிந்த
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் தருவாயில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு ஆதரவு வழங்கி எதிரணியில் இணைய அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்களவானோர் தயாராகி வருகின்றனர். மேலும் சிலரது ஒத்துழைப்புகளை பெறுதற்காக தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அரசாங்க பலத்தை இழக்கும் நிலைமையில் நாடாளுமன்றத்தை கலைக்கும் செயற்பாடுகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை தவிர்க்க தேவையான சகல திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலைமையை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் அதேவேளை பெரும்பான்மை பலத்தில் பிரதமரை தெரிவு செய்யவும் எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.
அதேவேளை வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் முறை வசிப்பின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற அரசாங்கம் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது.