4–வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள குயான்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணி தென்கொரிய அணியிடம் மோதியது. இப்போட்டியில் இந்திய அணி 15-வது நிமிடத்தில் தல்விந்தர் சிங் ஒரு கோலை பதித்தார். இதையடுத்து ராமன்தீப் சிங் 55-வது நிமிடத்தில் அணியின் இரண்டாவது கோல் அடித்தார். இதேபோல் தென் கொரிய அணிக்கு இன்வோ சியோ (21வது நிமிடம்), ஜிஹுன் யாங் (53வது) தலா ஒரு கோல் அடித்ததால் இரு அணிகளும் 2 - 2 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் 5 கோல் அடித்து அசத்திய இந்திய வீரர்கள் 5 - 4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது இதனால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடக்க உள்ள இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுடன் - இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. யார் சாம்பியன் கோப்பை கைப்பற்றுவார்கள் என்று மிகுந்த ஆர்வத்துடன் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.