புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2018

ஈழத்தமிழர் படுகொலை விவகாரம்; காங்கிரஸ், திமுகவிற்கு எதிராக அதிமுக இன்று பொதுக்கூட்டம்!


சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரில் இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளித்ததாகக் கூறினார்.

இது ஈழத் தமிழர் ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ், திமுக அரசுகள் தான் காரணம் என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக கடந்த வாரம் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது இரு கட்சிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி, தண்டிக்க வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்று 32 மாவட்டத் தலைநகரங்களிலும் மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

ad

ad