இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் mp மாவை சேனாதிராசாவின் தீவிர முயற்சியால் சுமார் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டபோதும் நிதிப்பற்றாக்குறை காரணமாக பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை . இந்நிலையில் நேற்று பிரதமர் ரணிலை சந்தித்திருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா mp அவர்கள் விரைவாக குறிகாட்டுவான் வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவேண்டுமென்று அழுத்தத்தை பிரயோகித்திருந்தார் .
எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சு செயலாளர் சிவஞானசோதி தெரிவிக்கின்றார்.
கடந்த பல தசாப்தங்களாக வேலணை - புங்குடுதீவு இணைப்பு பாலமாகிய வாணர் தாம்போதியே இலங்கையின் நீண்ட கடற்பாதையாக ( 4 km ) காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது . ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இவ் வீதியின் ஊடாகவே நயினாதீவு , நெடுந்தீவுக்கு சென்று வருகின்றனர் . ஆனாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற இப்பாலத்தோடு கூடிய வீதியின் நிலை குறித்து இருபது வருடங்களாக அதி சக்திவாய்ந்த அமைச்சராக விளங்கிய Epdp டக்ளஸ் தேவானந்தவோ அல்லது ஏனைய சிங்கள கட்சிகளூடாக அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களோ எவ்வித அக்கறையினையும் செலுத்தியிருக்கவில்லை . ஆனாலும் எமது வேண்டுகோளுக்கிணங்க மாவை சேனாதிராசா உள்ளிட்ட தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வீதியின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்குமாறு தொடர்ச்சியாக மைத்திரி - ரணில் அரசாங்கத்தினரை கோரிவந்தமை குறிப்பிடத்தக்கது .
அராலியை தீவகத்தோடு இணைப்பதற்கான பாலமொன்றும் இதனுள் உள்ளடங்குகின்றது . இதனால் வலிகாமம் - தீவகம் மக்களிடையிலான போக்குவரத்து பிரச்சினை தீர்க்கப்படவுள்ளது . பல்வேறு வியாபாரத் தொடர்புகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது .
அத்தோடு மண்டைதீவு - அல்லைப்பிட்டி இணைப்பு வீதியை விரைவில் புனரமைக்கும் பணிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது info-.thanks kunalan k