தேசிய சுகாதார ஆணைக்குழு (Agence Régionale de Santé) இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இல்-து-பிரான்சுக்குள் ஒவ்வொரு 100,000 பேரில் 499 பேர் இந்தக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த வாரத்தில் ஒவ்வொரு 100,000 பேருக்கும் 413 பேராக மாத்திரமே காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
கடந்த ஜனவரி 28 ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி 3 ஆம் திகதிக்குள் 3,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த எண்ணிக்கை 3,655 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிர்ச்சியளிக்கும் விதமாக, இதுவரை இந்தப் புதியகாய்ச்சலினால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்வேறு அவசரகால சுகாதார மையங்கள் இல்-து-பிரான்ஸ் முழுவதும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.