புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2020

கோணமலை எந்தன் கோட்டை தள்ளாத வயதிலும் தனிஒருவன் என்கிறாரா சம்பந்தன் -கேவலமான விமர்சனங்களுக்கு ஆப்பு வைத்து விழித்தெழுந்தார்

Jaffna Editorசம்பந்தன்திருகோணமலையில் சர்வதேச நீதி கோரி போராட்டம்! களத்தில் சம்பந்தன்சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று திருகோணமலையிலும் அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக தங்களது உறவுகளுக்காக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பங்கேற்றார்கள். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் திருகோணமலை மாவட்ட சங்கத்தின் தலைவி ஆசா உள்ளிட்ட பலர் உறவுகளுக்காக தங்களது அமைதியான போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

அமைதி வழி போராட்ட களத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் சென்று மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ad

ad