புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2020

கூட்டமைப்பு உறுப்பினர்கள் அறுவருக்கு இன்று (2) மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

Jaffna Editorமட்டக்களப்பு நீதிமன்றம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அறுவருக்கு இன்று (2) மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.

உண்ணாவிரதமிருந்து 1987 செப்.26இல் உயிர்

நீத்த த.வி.புலிகளின் உறுப்பினர் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு விளக்கேற்றத் தயாரானதாகக் குற்றம் சாட்டியே இது குறித்த அறிக்கைகள் பொலிஸாரால் நீதிமன்றுக்கு வழங்கப்பட்டன.

இந்த நினைவேந்தலுக்கு எதிராக நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சாணக்கியன், மட்டு. மேயர் ரி. சரவணபவன், முன்னாள் பா.உறுப்பினர்களான எஸ்.சிறிநேசன் மற்றும் எஸ்.யோகேஸ்வரன் , ஜனநாயக போராளிகள் கட்சியின் துணைத் தலைவர் என்.சங்கரப்பிள்ளை  உள்ளிட்ட அறுவரே நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர்.

ad

ad