Jaffna Editor
பொறிஸ் ஜோன்சன் அரசாங்கம் இன்று பெரும் திண்டாட்டத்தில் உள்ளது: சற்று முன்னர் சுகாதார திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின் படி கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 367 பேர் கொரோனாவால் இறந்துள்ளார்கள். மேலும் 22 ஆயிரத்தி 885 பேருக்கு தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்றின் எண்ணிக்கை 45,000 ஆக இருக்கும் என்று உத்தியோகபற்றற்ற அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.இதனை அடுத்து பல MPக்கள் முழு அளவிலான லாக் டவுன் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க ஆரம்பித்துள்ளார்கள். இனி என்ன நடக்க இருக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழர்களே ஜாக்கிரதை.