புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2021

இறுகுகிறது பிடி - இலங்கையை கண்காணிக்க ஜெனிவாவில் புதிய செயலகம்

www.pungudutivuswiss.com
ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை செயல்படுத்த சிறப்பு அலுவலகம் அமைக்க மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் முடிவு செய்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பண்டைய தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிப்பதும், நாட்டில் தற்போதைய மனித உரிமை பிரச்சினைகளை கண்காணிப்பதும் இதன் முக்கிய நோக்கம்.

ஜெனீவா வட்டாரங்களின்படி, இதற்காக 2.8 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்படும்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து மீறப்படுமானால் , ஏதாவது ஒரு நாடு அதற்கு எதிராக வழக்கு தொடுக்க தேவையான ஆதாரங்களை தேடி வழங்க இந்த அலுவலகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயலகம் விசாரணையாளர்கள் சட்டத்தரணிகளை கொண்டிருக்கும்.

உருவாக்கப்படவுள்ள இந்த செயலகம் உலகளாவிய நியாயாதிக்கத்தை பயன்படுத்தும் நாடுகள் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை சேகரிக்கும்.

இதன் காரணமாக இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட படைத்தரப்பினர் வெளிநாடுகளில் கைதுசெய்யப்படலாம் வெளிநாட்டு நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்.

இலங்கையின் யுத்தத்துடன் தொடர்புபட்ட அரசியல் தலைவர்களும் வெளிநாடுகளில் கைதுசெய்யப்படலாம்.

ad

ad