புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2021

திருநெல்வேலி பாற் பண்ணை பகுதி உயர் கண்காணிப்பு வலயமாக பிரகடனம்!

www.pungudutivuswiss.com
திருநெல்வேலி, பாற்பண்ணை பகுதி கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அதனால் அந்தப் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள்ளே செல்வதும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.


திருநெல்வேலி, பாற்பண்ணை பகுதி கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அதனால் அந்தப் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள்ளே செல்வதும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயம் மற்றும் திருநெல்வேலி பரமேஸ்வரா ஆரம்ப பாடசாலை என்பன மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாகவும், அவர் கூறினார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலாளர் தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், அந்தப் பகுதியில் இருந்து அத்தியாவசிய சேவை மற்றும் தொழில் நிமிர்த்தம் வெளியில் செல்பவர்கள் அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்க முடியும் என்றார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மார்ச் மாதம் 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், நேற்று 143 பேருக்கு தோற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அடுத்து வரும் ஒரிரு நாள்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர் எனத் தெரிவித்த அவர், மேலும் நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார பிரிவுகளில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாகவும் கூறினார்.

திருநெல்வேலி, பாற்பண்ணை பிரதேசம் கண்காணிப்பு வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அபாய இடர் வலயமாக திருநெல்வேலி பிரதேசம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால், முத்துத்தம்பி மகா வித்தியாலயம் மற்றும் பரமேஸ்வரா ஆரம்ப பாடசாலை ஆகிய இரு பாடசாலைகளையும், மறு அறிவித்தல் வரை மூடுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் பேசி முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறினார்

"யாழ்ப்பாணம் மாநகர், திருநெல்வேலி நகர் கடைகளை மூடி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். "மாணவர்கள், தொற்று உறுதி செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டால் பாடசாலைக்குச் செல்வதை தவிர்க்கவும்" என்றும், க.மகேசன் தெரிவித்தார்.

ad

ad