பங்காளி கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பின்போது எட்டப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே கூட்டணியின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது.
அரசில் அங்கம் வகிக்கும் 11 அரசியல் கட்சிகள் பொலநறுவையில் தனியாக மேதின பேரணியை நடத்தவுள்ளன.அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் தமது மேதின பேரணியை பொலநறுவையில் நடத்தவுள்ளது.சுதந்திரக்கட்சியின் மேதின பேரணியில் பங்குபற்ற அரசில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளும் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளன.
இதேவேளை பொதுஜனபெரமுன தனியாக மேதின பேரணியை நடத்தவுள்ளது.
இந்தநிலையிலேயே மகிந்தவுடனான சந்திப்பு நடைபெறவுள்ளது.இந்த சந்திப்பின்போது கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு முடிவு கட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.