பலாலி வடக்கு உள்ளிட்ட மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் 3 மாவட்டங்களை சேர்ந்த 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் பலாலி வடக்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பொலிஸ் பிரிவில், கல்மடு கிராம சேவகர் பிரிவும், மொனராகல மாவட்டத்தில் செவனகல பொலிஸ் பிரிவில், 6 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.