அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றில் முன் வைக்கப்படவுள்ளது. இந்நிலையில், வரவு செலவு திட்ட ஆவண தயாரிப்பு தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இறக்குமதி தடை அல்லது இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கும் பொருட்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த கலந்துரையாடலிலேயே கடதாசிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் ஆரயப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இவ்வாறான நிலையில் வர்த்தகர் ஒருவர் பெருமளவு காகிதங்களை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், காகிதங்கள் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், அது பத்திரிகை அச்சுத் துறையை மிக மோசமாக பாதிக்கும் என அவதானிகள் எச்சரிக்கின்றனர். |