புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2021

பலாலிக்கான விமான சேவை அடுத்த மாதம் ஆரம்பம்!

www.pungudutivuswiss.com


கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு - யாழ்ப்பாணத்துக்கு இடையிலான உள்நாட்டு விமான சேவை, நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று, சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு - யாழ்ப்பாணத்துக்கு இடையிலான உள்நாட்டு விமான சேவை, நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று, சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகளை மீண்டும் தொடங்குமாறு, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், நாடு மூடப்படுவதற்கு முன்பு, இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்துக்கு வாரத்துக்கு இரண்டு முறை விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad