பொலன்னறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் கடுகதி ரயில் சேவையை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்குமாறு கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் சாணக்கியன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் பொலன்னறுவை - கொழும்பு கோட்டைக்கு இடையிலான ரயில் சேவை, நாளை முதல் மட்டக்களப்பு - கொழும்பு சேவையாக விஸ்தரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. |