தீவகத்தில் பசுக்களை பாதுகாப்போம் எனும் கருப்பொருளிலான கலந்துரையாடலொன்று அண்மையில் யாழ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் திரு .மறவன்புலவு சச்சிதானந்தன் மற்றும் தீவக சிவில் சமூகம் ( islands civil society ) அமைப்பின் பொருளாளர் திரு. கருணாகரன் குணாளன் ஆகியோரின் ஏற்பாட்டில் தீவகம் தெற்கு ( வேலணை) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது . ஆக்கபூர்வமாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் , உதவி பிரதேச செயலாளர் , கிராமசேவகர்கள் , வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன், செல்லப்பா பார்த்தீபன், ஆ.கோபாலகிருஸ்ணன் ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் தா. ரெஜினா , தீவக சிவில் சமூக செயலாளரும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான மாணிக்கவாசகர் இளம்பிறையன் மற்றும் முப்பதுக்கு மேற்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர் .