புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2022

ஜி20 மாநாட்டிற்கு மத்தியில் யுக்ரேன் தலைநகர் கீவில் தாக்குதல் நடத்திய ரஷ்யா

www.pungudutivuswiss.com
6 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்தோனீசியாவில் ஜி20 மாநாட்டிற்காக உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடியுள்ள நிலையில், யுக்ரேன் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
மிகோலைவ், செர்னிவ், சபோரிசியா ஆகிய இடங்களில் ரஷ்யா தாக்குதல் தொடுத்துள்ளது.
ஜி20 மாநாட்டிற்காக இந்தோனீசியாவில் ஒன்றுகூடிய தலைவர்கள் யுக்ரேனில் நடைபெற்று வரும் போர் குறித்து தங்களின் கண்டனங்களை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
கீவில் தாக்குதல் நடத்திய பல ரஷ்ய ஏவுகணைகள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டன என கீவ் நகர மேயர் விடாலி க்லிச்ஷ்கோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவை முடக்கும் அமெரிக்காவின் புதிய தடைகள் - புதின் என்ன செய்வார்?
2 அக்டோபர் 2022
யுக்ரேனில் ஆக்கிரமித்த இடங்கள் ரஷ்யாவோடு இணைப்பு: விளாதிமிர் புதின்
30 செப்டெம்பர் 2022
யுக்ரேன் மீது படையெடுக்கும் ரஷ்ய அதிபர்: யார் இந்த விளாதிமிர் புதின்?
26 பிப்ரவரி 2022
மேலும் கீவில் வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட செர்னிவ் நகரின் மேயர் வ்யாசெஸ்லவ் சாயஸ், ஏவுகணை தாக்குதல் தொடர்வதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரத்தில் யுக்ரேனின் தெற்கு நகரமான கெர்சனிலிருந்து ரஷ்யப் படைகள் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டன. இது ரஷ்யப் படைகளுக்கு பலத்த அடியாக பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் ரஷ்ய படைகள் இம்மாதிரியாக தரை வழியில் பின் வாங்கலை சந்திக்கும்போது வான் வழியாக அதற்கு பதலடி கொடுத்து வருகின்றன.
Gefällt mir
Kommentieren
Teilen

ad

ad