இன்னமும் மக்கள் உணவுப்பொருட்கள் விலைவாசியை எதிர்கொள்ளத் திணறிவரும் நிலையில், நேற்று இரவு, Danube நதித் துறைமுகத்தில் உள்ள தானியக் கிடங்குகள் மீது ரஷ்யா வான்வெளித்தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனிலிருந்து பிற நாடுகளுக்கு கப்பல் மூலம் தானியங்கள் அனுப்பப்படும் முக்கியமான இடம் இதுதான். ஒடிஷா பகுதி கவர்னரான Oleh Kiper இந்த தாக்குதல் குறித்துக் கூறும்போது, நேற்று இரவு, இரண்டு முறை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தானியக் கிடங்குகளின் கூரைகள் தாக்குதலில் சேதமடைந்துள்ளதைக் காட்டும் படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த தாக்குதலில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது |