புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2023

மேர்வின் சில்வா மீது வட்டுக்கோட்டை பொலிசில் முறைப்பாடு

www.pungudutivuswiss.com

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விகாரைகள் மீதும் பிக்குகள் மீதும் கை வைத்தால், கை வைப்பவர்களது தலையை எடுத்து களனிக்கு கொண்டு செல்வதாக, களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார். அவரது இந்த கருத்திற்கு பலரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விகாரைகள் மீதும் பிக்குகள் மீதும் கை வைத்தால், கை வைப்பவர்களது தலையை எடுத்து களனிக்கு கொண்டு செல்வதாக, களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார். அவரது இந்த கருத்திற்கு பலரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம், மேர்வின் சில்வாவின் கருத்துக்கு எதிராக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதன்போது, இனவாத கருத்துக்களை தூண்டி வன்முறையை ஏற்படுத்துவதற்கு மேர்வின் சில்வா முயல்வதாக அவர் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad