அந்த வகையில், நேற்று நள்ளிரவில் கர்நாடாக மாநிலம், பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர், பெங்களூரு மாநகராட்சியின் 95 -வது வார்டின் முன்னாள் கவுன்சிலராவார். இவருடைய கணவரான அம்பிகாபதி ஒப்பந்ததாரர் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான பெங்களூரு, ஆர்.டி.நகர் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பூட்டி வைத்த அறை ஒன்றில் உள்ள மெத்தைக்கு அடியில் இருந்த அட்டைப்பெட்டியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது சோதனையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, 23 அட்டை பெட்டிகளில் இருந்த ரூ.42 கோடி ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |