இலங்கை தமிழ் அரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போரளிகள் உள்ளிட்ட தரப்புக்களே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளன. குறித்த கட்சிகள் தெரிவித்துள்ளதாவது, ஆதவினை வழங்குமாறு கோரி நிற்கின்றோம். அத்துடன், வடக்கு,கிழக்கில் செயற்படுகின்ற மேற்படி தரப்புகளுடன் நாம் அடுத்துவரும் நாட்களில் ஆதரவினைக் கோரும் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளோம் என்று அக்கட்சிகள் குறிப்பிட்டன. இதேவேளை, ஹர்தாலுக்கான ஆதரவினையும் ஒத்துழைப்புக்களையும் பொதுமக்களிடத்தில் கோருகின்ற துண்டுப்பிரசுர விநியோகமும் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சிகள் அறிவித்துள்ளன. |