பாராளுமன்றத்தில் புதன்கிழமைஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்தே சாணக்கியன் இராசமாணிக்கம் இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் ஜனாதிபதி தற்போது நாட்டில் இல்லை. நாட்டின் பொலிஸூக்கு பொறுப்பான அமைச்சரும் நாட்டில் இல்லை. அத்துடன் பொலிஸ்மா அதிபரின் நியமனமும் சட்டவிரோதமானது, அதற்கு அரசியலமைப்பு பேரவையின் அனுமதி கிடைக்கவில்லை என்று ஒரு தரப்பு கூறுகின்றது. இதேவேளை ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போது நியமிக்கப்படுபவர்களை அரசியலமைப்பு பேரவையால் நீக்க முடியாது என்று இன்னுமொரு தரப்பு கூறுகின்றது. இதேவேளை ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி கூட்டமொன்றை நடத்தி கூறிவற்றை இன்று வரையில் பொலிஸாரால் மட்டக்களப்பில் செயற்படுத்தவில்லை. பொலிஸ்மா அதிபர் இல்லாத நேரத்தில் நாங்கள் பிரச்சினைகளை யாரிடம் கூறுவது என்று வினவினார் |