அதே சமயம் அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில், பாஜக உடனான கூட்டணி குறித்து தனது அணி நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது குறித்து அவர் பேசுகையில், “அதிமுக தனித்து நின்றால் வெற்றி பெறாது. தற்போது இருக்கக்கூடிய அதிமுக ஒன்றுபட்டால் தான் வெற்றி பெற முடியும். பாஜக இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது. எடப்பாடி பழனிசாமிக்கு நான் தூது அனுப்பியதாக கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். நானும் தினகரனும் இணைந்திருக்கிறோம். எங்கள் அணிக்கு வருவது குறித்து சசிகலா தான் கூற வேண்டும். |