இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் தேர்வை பிற்போட
தலைவர் தெரிவும், சகல உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்த மாநாடும் நடைபெற வேண்டும் என இரா.சம்பந்தன் தற்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.
கட்சி தலைமைய கைப்பற்ற போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று(9) நேரில் சந்தித்து இரா.சம்பந்தன் தனது புதிய கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாடு கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் புதிய தலைவர் தெரிவில் சிறீதரன் மற்றும் சுமந்திரன் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு மற்றும் தேசிய மாநாடு தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் இன்று(10); கொழும்பில் உள்ள இரா.சம்பந்தன் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.