இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட உலங்கு வானூர்தி மூலம் வருகை தந்த இளவரசி, யாழ்ப்பாணம் நாவாந்துறை பொது மைதானத்தில் தரையிறங்கிய போது, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வரவேற்றார். . இதன்போது பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது. |