பாராளுமன்றத்தில் புதன்கிழமைஇடம்பற்ற 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில், உயிர்த்த ஞாயிறு தின . குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து விட்டதாக அரசாங்கம் கூறுகின்றது.ஆனால் எவருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அமெரிக்காவின் எப்.பி.ஐ. பிரிவு பல விடயங்களை குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாதி சஹ்ரானுடன் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூல கொடித்துவக்கு பலமுறை தொடர்புக் கொண்டுள்ளார். ஆகவே சஹ்ரானுக்கும்,இவருக்கும் இடையிலான தொடர்பு என்ன? என்றும் வினவினார் |