கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வருமாறு பதிலளித்தார். கேள்வி – புதிய அரசியல் கூட்டணிகள் ஸ்தாபிக்கப்படுகிறது,கூட்டணி தொடர்பில் நீங்கள் அவதானம் செலுத்தவில்லையா ? பதில் - புதிய அரசியல் கூட்டணி குறித்து பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் வெகுவிரைவில் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி அமைக்கப்படும். கேள்வி – உங்களின் தாய் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீ பற்றி எரிகிறதே, பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீங்கள் ஆலோசனை வழங்க போவதில்லையா? பதில் -சந்திரிக்கா அம்மணி வந்து தலைவர் மைத்திரியை விரட்டியடித்துள்ளார். தவறுகள் தற்போது திருத்திக் கொள்ளப்படுகின்றன. சுதந்திர கட்சி பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. சுதந்திர கட்சியை கட்டியெழுப்பும் உரிமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு உண்டு. கேள்வி – குறுகிய காலத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எழுச்சிப் பெற்றதை போன்று சுதந்திர கட்சியும் எழுச்சி; பெறும் என்று எதிர்பார்க்கின்றீர்களா ? பதில் - நிச்சயமாக சுதந்திர கட்சி மீண்டும் எழுச்சிப் பெறும். கேள்வி – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவுடன் இணக்கமாக செயற்படுகிறாரா ? பதில்- இணக்கமாக செயற்படும் வரை இணைந்து பயணிப்போம் முடியாவிடின் விலகி விடுவோம். கேள்வி –பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க போவதில்லை என ஆளும் தரப்பின் உறுப்பினர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகிறாரே? பதில் - அது அவரது தனிப்பட்ட நிலைப்பாடு.கட்சியின் உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என்றார் |