புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூலை, 2025

கட்டாரில் உள்ள அமெரிக்க விமானத் தளம் ஈரான் தாக்கியதை ஒப்புக்கொண்டது அமெரிக்கா

www.pungudutivuswiss.com
ஈரானில் உள்ள அணு ஆராய்

ச்சி மையங்களை குறிவைத்து கடந்த மாதம் 13ம் திகதி இஸ்ரேல்
தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையே போர் வெடித்தது. 12 நாட்கள் நீடித்த இந்த போரின்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அமெரிக்க குண்டுவீச்சு விமானம் மூலம் ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.
இதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அல் உதெய்ட் அமெரிக்க விமானப்படைத்தளம் மீது கடந்த மாதம் 23ம் திகதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கத்தாரில் உள்ள அல் அடிட் விமானப்படைத்தளத்தில் அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த விமானப்படைத்தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணைகள் வான்பாதுகாப்பு அமைப்பால் தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது.
கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தை ஈரான் தாக்கியது என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஒப்புக்கொண்டார். தாக்குதலுக்கு உள்ளான செயற்கைக்கோள் படங்கள் கசிந்த பின்னர், பென்டகன் இனி மறைக்க முடியாததை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடந்த மாத தாக்குதலின் போது கத்தாரில் உள்ள அமெரிக்க அல்-உதெய்த் விமானப்படை தளத்தை ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக தாக்கியது. ஒரு முக்கிய அமெரிக்க தகவல் தொடர்பு குவிமாடம் 15 மில்லியன் டொலர்கள் அழிக்கப்பட்டது.

ad

ad