1) குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக திருச்சி சிவா அறிவிக்கப்பட வாய்ப்பு !

திருச்சி சிவா முகநூல்
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், திடீரென ராஜினாமா செய்ததையடுத்து குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
2) செஞ்சியில் பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடிக்கப்பாய்ந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் !

சீமான்pt
செஞ்சி பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பவுன்சர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதை மேடையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த சீமான், பிரச்னையை பேசி தீர்க்காமல் அவரும் அடிப்பது போல் கீழே இறங்கி வந்ததால் மேலும் பிரச்னை தீவிரமடைந்தது. பின்னர் செஞ்சி போலீசார் பத்திரிகையாளர்களை பத்திரமாக மீட்டு சென்றனர்.
3) அதிமுக பலவீனமாக இருக்கிறது, அதை சரி செய்வது தான் என் வேலை.. - சசிகலா

சசிகலா வழிபாடுpt desk