-

23 டிச., 2025

பிரியாணியை வழங்கி மாநகர சபையொன்றை ஆட்சி செய்ய முடியாது என்பது நிரூபணமாகி உள்ளது

www.pungudutivuswiss.com
. கொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தை வெற்றி
கொள்வதற்காக ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு
பிரியாணி வழங்கியதாக முஜீபர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் கூட்டு எதிர்க்கட்சியினரது வசம் உள்ளது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தி தேசிய மக்கள் சக்தி செய்த நாடகமும் 6 மாதங்களில் முடிந்து விட்டது.
கொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ad

ad