நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை தகாத வார்த்தைகளால் பேச வேண்டாம் என்று இராமநாதன் அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.
இன்றைதினம்(26) இடம்பெற்ற யாழ் ஒருங்கிணைப்பு குழுகூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உரையாற்றும் போது இளங்குமரன் குறுக்கிட்டார்.
அதன்போது சிறீதரன் எம்.பி அவரை தடுத்தார்.
இடையில் குறுக்கிட்ட அர்ச்சுனா எம்.பி இவ்வாறான தகாத வார்த்தைகளால் அவரை பேச வேண்டாம் என்றார்.
தமிழரசுக்கட்சின் தலைவரும் அதன் பிரதேச சபை உறுப்பினர்களும் இப்படிதான் என்றும் அர்ச்சுனா குறிப்பிட்டார்.எல்லாவற்றையும் குழப்புவது தான் இவர்களது வேலை என்றார்.
இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது