புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2013


மட்டு.வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் 25 பேர் 9 “ஏ” சித்திகளைப் பெற்று சாதனை
கா.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வின்சன்ட் தேசிய மகளிர் உயர் பாடசாலை மாணவர்கள் 25 பேர் ஒன்பது பாடங்களில் 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெளியாகியுள்ள இணையத்தள பரீட்சை முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வின்சன்ட் தேசிய மகளிர் உயர் பாடசாலை அதிபர் திருமதி கனகசிங்கம் தெரிவித்தார்.
தமிழ் மொழியில் தோற்றிய 21 மாணவர்களும் ஆங்கில மொழியில் தோற்றிய 04 மாணவர்களும் ஒன்பது பாடங்களில் ஏ சித்தியை பெற்றுள்ளதுடன் தமிழ் மொழியில் 06 மாணவர்களும் ஆங்கில மொழியில் 05 மாணவர்களும் எட்டு ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ad

ad