புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2016

ம்பந்தனை படுகொலை செய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர் – சிவி விக்னேஸ்வரன்

எதிரக்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஓருவர்
தனக்கு தகவல் வழங்கியதாக வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் ஆங்கிலநாளேடு ஓன்றிற்கு தெரிவித்துள்ளார்
முதலமைச்சர் தெரிவித்ததாக அந்த நாளேடு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
வடமாகாண முதலமைச்சர் தனக்கு செப்டம்பர் மாதம் பலப்பிட்டியவை சேர்ந்த சிங்கள நபர் ஓருவரிடமிருந்து மின்னஞ்சலொன்று வந்ததாகவும் பின்னர் அந்த நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் தெரிவித்தார்.
நபர் ஓருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது, அனேகமாக மின்னஞ்சல் அனுப்பியநபராகத்தான் அவர் இருக்கவேண்டும்,. அவர் எதிர்கட்சி தலைவர் சம்பந்தனை கொலைசெய்வதற்கு தீட்டப்பட்டுள்ள  திட்டம் குறித்து தனக்கு தெரியும் என தெரிவித்தார்,இதற்காக நபர் ஓருவரிற்கு  25 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது எனவும்  இந்த கொலைக்கு விடுதலைப்புலிகள் மீது  பழிபோட திட்டமிட்டுள்ளனர் எனவும் அந்த நபர் குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகள் அமைப்பு இன்னமும் இயங்குகின்றது என்பதை காண்பிக்கவே அவ்வாறு திட்டமிடப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார். அந்த நபர் தானே குறிப்பிட்ட மின்னஞ்சலை அனுப்பியதாக குறிப்பிட்டார்,தனக்கு இது குறித்து எவ்வாறு தெரியவந்தது,எதிர்கட்சி தலைவரை கொலை செய்யும் பொறுப்பு யாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளது போன்ற விபரங்களையும் அவர் என்னிடம் தெரிவித்தார்.
நான் இந்த விடயம் குறித்து ஆராய்ந்த பின்னர் பொலிஸ்மா அதிபரிடம் தெரிவிப்பதாக கூறினேன்,எனது முறைப்பாட்டினை ஜனாதிபதிக்கும் அனுப்புவதாக தெரிவித்தேன், நான் எனக்கு பாதுகாப்பு கோரவில்லை, இந்த விடயம் குறித்து அறிந்த பின்னர் வடமாகாண சபையே எனக்கான பாதுகாப்பை கோரியது,நான் ஓருபோதும் எனக்கு பாதுகாப்பை கோரியதில்லை. வடமாகாணசபை அரசாங்கத்திடம் எனக்கான பாதுகாப்பை கோரியவேளை அரசாங்கத்திடமிருந்து வந்த பதிலில் அரசியல் தொனி காணப்பட்டது.
சில நாட்களிற்கு முன்னர் அந்த நபர் மீண்டும் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். பயங்கரவாத விசாரணை பிரிவின் தலைவர் டி சில்வா என்பவர் எனக்கு தகவல்களை வழங்கியதற்காக தன்னை துன்புறுத்துவதாக  அவர் குறிப்பிட்டார்.
நான் அவரிடம் ஏன் தமிழர் ஓருவருக்கு உதவுகின்றீர்கள் என கேட்டேன். நான் அந்த நபரின் தொலைபேசி இலக்கங்கள் உட்பட முக்கிய தகவல்களை பொலிஸ் மா அதிபரிற்கு வழங்கியுள்ளேன், அவர் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். மிகவும் பாரதூரன இந்த விடயத்தை அரசியல் கோமாளித்தனத்திற்கு பயன்படுத்த எவரும் முயலக்கூடாது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ad

ad