தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில்
உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் என பலர் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
அதன் பயனாக தற்போது ஜெயலலிதா நல்ல நிலையில் உள்ளதாகவும், ஓரிரு வார்த்தைகள் அவ்வப்போது பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்பதற்காக பிரபல திரைப்பட நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகரான விவேக் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிப்பாடு ஒன்றை நடத்தினார். இந்த சிறப்பு வழிப்பாட்டில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட 27 வகையான படையல்களை வைத்து வழிபட்டார்.
அவரைத் தொடர்ந்து தற்போது நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரான நடிகர் சரத்குமாரின் மகள் ஒன்றை நடத்தியுள்ளார்.