புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2019

மீண்டும் கொடூர முதலை யுகமா? - ஏ.கே.கோடீஸ்வரன் கொந்தளிப்பு


தமிழர்களை கடத்தி சித்திரவதை செய்து முதலைக்கு இரையாக்கியவர்களை மீண்டும் ஆட்சிபீடமேற்றினால் நாடு சுடுகாடாகும். அது தேவையா? எனவே பௌத்த தர்மத்தைக் கடைப்பிடிக்கும் மனிதாபிமானமுள்ள சஜித்தை ஆதரிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் நேற்று காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், நாம் நம்பிக்கையினடிப்படையில் சஜித்தோடு பேசியுள்ளோம். புலிகள் கூட அப்போது அந்த அடிப்படையில் பேசினார்கள். எனவே, சஜித் ஜனாதிபதியானதும் ஏமாற்றினால் அதற்கு தமிழ் மக்கள் தக்க பதிலடி வழங்குவார்கள். யுத்தம் வெல்லப்பட்ட பிறகு 2015ஆம் ஆண்டு வரை நாட்டில் என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எமது மக்கள் அழித்தொழித்து சின்னாபின்னமாக்கப்பட்டார்கள். கடத்தல், நிலஅபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டார்கள் மக்கள். ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களைக் கூற முடியாது. அப்படிக்கூறினால் மறுநாள் பிணம்.
தமிழர்களை கடத்தி சித்திரவதை செய்து முதலைக்கு இரையாக்கியவர்களை மீண்டும் ஆட்சிபீடமேற்றினால் நாடு சுடுகாடாகும். அது தேவையா? எனவே பௌத்த தர்மத்தைக் கடைப்பிடிக்கும் மனிதாபிமானமுள்ள சஜித்தை ஆதரிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் நேற்று காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், நாம் நம்பிக்கையினடிப்படையில் சஜித்தோடு பேசியுள்ளோம். புலிகள் கூட அப்போது அந்த அடிப்படையில் பேசினார்கள். எனவே, சஜித் ஜனாதிபதியானதும் ஏமாற்றினால் அதற்கு தமிழ் மக்கள் தக்க பதிலடி வழங்குவார்கள். யுத்தம் வெல்லப்பட்ட பிறகு 2015ஆம் ஆண்டு வரை நாட்டில் என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எமது மக்கள் அழித்தொழித்து சின்னாபின்னமாக்கப்பட்டார்கள். கடத்தல், நிலஅபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டார்கள் மக்கள். ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களைக் கூற முடியாது. அப்படிக்கூறினால் மறுநாள் பிணம்.

2015இற்கு பின்னர் நல்லாட்சி அரசாங்கம் ஓரளவு நிம்மதியைத் தந்தது. படையினர் வசமிருந்த 85 வீதமான காணிகளை விடுவித்தார்கள். சுதந்திரமாக ஊடகவியலாளர்கள் இயங்கினர். மக்களும் துணிந்து கருத்துரைக்கத்தலைப்பட்டனர். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு புதிய அரசியல் யாப்பு தொடர்பில் 60வீத வளர்ச்சியைக் கண்டது. எனினும், உத்தமனாக வந்த ஜனாதிபதி கடைசியில் மாறிநடக்க முற்பட்டார். >கடந்த அரசை 100வீதம் நல்லது எனக் கூறவில்லை. எனினும், ஏதோ நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை மறுக்கமுடியாது.

இலங்கையின் இரு பிரதான வேட்பாளர்களும் பௌத்த மதவாத கருத்திலே ஊறியவர்கள். பௌத்த மதகுருமாரின் கட்டளைக்கிணங்கவே நடப்பார்கள். அது வழமை எனினும் சிறந்த பௌத்த மத போதனைகளை முறைப்படி பின்பற்றுகின்றன அல்லது கடைப்பிடிக்கின்றவர் சஜித் மட்டுமே. மனிதாபிமான சிந்தையுள்ளவர்கள், வடக்கு மற்றும் கிழக்கில் நியாயமான வீடுகளை கட்டிக்கொடுத்தவர். பல அமைச்சர்கள் அவரவர் இனங்கள் வாழுகின்ற இடங்களையே அபிவிருத்தி செய்தார்கள். ஏனையோரை திட்டமிட்டுப் புறக்கணித்தார்கள். எமது பிரதேசம் அதற்கு நல்லசாட்சி.

இலங்கையில் இன, மத, வாதம் எப்போது பூண்டோடு அழிக்கப்படுமோ அன்றுதான் இலங்கைக்கு சுபீட்சம். அது நடக்குமா? எனவே குறைந்த பட்சகுணமுள்ளவர்களுடனாவது கூட்டுச்சேர வேண்டும். பௌத்த தர்மத்தை முறைப்படிக் கடைப்பிடிக்காத தேரர்கள் சிலரின் அடாவடித்தனத்தால் நாட்டில் நிரந்தரமான இன நல்லிணக்கம் கேள்விக்குறியாகிக் கொண்டே போகிறது. புதிய ஜனாதிபதியாக சஜித் வந்ததும் ஜ.நா தொடக்கம் எமது நாடுகளின் அழுத்தங்களை வரவழைத்து எமது பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்போம். அவரும் அதற்கு இணங்குவார்.

இந்தியாவின் வகிபாகம் பாரியது. இலங்கையோடு நட்புறவுக்கு அப்பால் தமிழ் மக்களது துன்பியல் சரித்திரத்தை நன்கு உணர்ந்த நாடு. எனவே அவர்களது ஆதரவையும் நாடிநிற்கிறோம். வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சஜித் பிரேமதாச தான் எமது ஜனாதிபதி என்பதை என்றோ தீர்மானித்து விட்டார்கள். எனவே ஊரோடு ஒத்துப்போக வேண்டும். ஆதலால் நாமும் சஜித்தையே ஆதரித்து வெற்றியின் பங்காளராவோம் என அவர் கூறியுள்ளார்

ad

ad