முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இராணுவத்தினரை சுட்டுக்கொன்று, தீமூட்டியதாக சிவதீபன் என்ற முன்னாள் போராளி மீது குற்றம்சாட்டப்பட்டு டயல்டோர்ஃப் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடந்து வந்தது.
2009 யுத்தம் முடிந்த சமயத்தில் சவதீபன் ஜேர்மனிக்கு சென்றிருந்தார். அங்கு ஜேர்மனி பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
அவர் மீதான குற்றச்சாட்டுக்களிற்கு ஆதாரமில்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளார்