காவல்துறை பணியாளர்களுக்காக ரூ.472 கோடியில் 4340 குடியிருப்பு
துணைஆணையர், கமாண்டன் ட்டுக்கு 2446 சதுர அடியில் 6 குடியிருப்புகளும், துணை காவல்துறை கண்காணிப்பாளர், உதவி கமாண்டன்டுக்கு 1,100 சதுர அடியில் 7 குடியிருப்புகளும், காவல்துறை ஆய்வாளர்களுக்கு 850 சதுர அடியில் 62 குடியிருப்புகளும், காவல்துறை சார்நிலை ஆய்வாளர்களுக்கு 850 சதுர அடியில் 170 குடியிருப்புகளும், தலைமை காவலர் மற்றும் காவலர்களுக்கு 650 சதுர அடியில் 4,095 குடியிருப்புகள் என மொத்தம் 4,340 குடியிருப்புகள் கட்டப்படும். இந்த பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ.100 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.சென்னை : காவல்துறை பணியாளர்களுக்காக இந்த ஆண்டு ரூ.472 கோடியில் 4,340 குடியிருப்புகள் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல் கட்டமாக ரூ.100 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இந்த ஆண்டு காவல்துறை பணியாளர்களுக்காக ரூ.472 கோடியே 5 லட்சம் செலவில் 4,340 குடியிருப்புகள் கட்ட ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் காவல்துறை கண்காணிப்பாளர்,
சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் படை குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த படைக்குடியிருப்பு மிகவும் பழமை வாய்ந்த கட்டிடமாக உள்ளதால், அந்தக் கட்டிடத்தை ஸீ2 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் 500 காவலர்கள் தங்குவதற்கு வசதியாக, 2 மாடி கொண்ட கட்டிடமாக 1,593 சதுர மீட்டர் பரப்பளவில் புனரமைத்து கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஆயுதப்படை வளாகங்கள், சிறப்பு காவல் படை வளாகங்கள் மற்றும் காவலர் பயிற்சி பள்ளிகள் போன்ற 37 இடங்களில் வகுப்பறைகளை புதுப்பித்தல், குடிநீர் மற்றும் கட்டமைப்பு வசதிகளை சீர்செய்தல், கவாத்து மைதானங்களை சீரமைத்தல், சமையல் மற்றும் உணவு கூடங்கள், பயிற்சியாளர் தங்குமிடங்களை மேம்படுத்துதல் மற்றும் புதிதாக கட்ட மொத்தம் ரூ.14.95 கோடி அனுமதித்தும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.