புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2013

கடுமையாகும் சுவிட்சர்லாந்தின் தஞ்சக் கோரிக்கை சட்டங்கள்
சுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோருவோர் தொடர்பான சட்ட விதிகளை கடுமையாக்குவதற்கு அந்நாட்டு மக்கள் பலத்த ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
தஞ்சக்கோரிக்கை தொடர்பான சட்டங்களில் கடந்த செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 80 வீதமான மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளதாக ஆரம்பக்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய சட்டவிதிகளின்படி, இராணுவத்திலிருந்து தப்பிவருபவர்கள் இனிமேல் அங்கு தஞ்சம் கோரமுடியாது.
அதேபோல, வெளிநாடுகளில் உள்ள சுவிஸ் தூதரகங்கள் ஊடாக இனிமேல் எவரும் தஞ்சம் கோரமுடியாதபடியும் சட்டத்திருத்தம் வந்துள்ளது.
தஞ்சக் கோரிக்கை சட்டத்தில் கொண்டுரப்பட்ட சட்டத்திருத்தத்தை எதிர்த்து, மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று மனித உரிமை அமைப்புகளும் இடதுசாரிகளும் நடத்திய கையெழுத்து வேட்டையின் பிரகாரமே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் கடந்த பத்தாண்டுகளில் தஞ்சக் கோரிக்கைகள் அளவுகடந்து அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த சட்டத்திருத்தம் தாய்நாடொன்றிலிருந்து தஞ்சம் கோரி விண்ணப்பிப்பவர்களைப் பாதிக்காது என்றும் மூன்றாவது நாடொன்றில் உள்ள சுவிஸ் தூதரகத்தினூடாக விண்ணப்பிப்பதையே தடுப்பதாகவும் சுவிட்சர்லாந்தின் லுத்செர்ன் மாநில சோசலிஸக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் லதன் சுந்தரலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வெளிநாட்டவர்களின் குடியேற்றத்துக்கு எதிராக மேற்குலக நாடுகளில் அதிகரித்துவரும் அழுத்தங்களின் தொடர்ச்சியே சுவிட்சர்லாந்தின் கொள்கை மாற்றமும் என்றும் அவர் கூறினார்.

ad

ad