புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2013

பலபிட்டியவில் இன்று 11 மீனவர்களின் சடலங்கள் மீட்பு!: உயிரிழப்பு 41 ஆக அதிகரிப்ப
பலபிட்டிய பிரதேசத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 11பேரின் சடலங்கள் இன்று காலை குறித்த பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ளன. 
கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் காணாமல் போயிருந்தனர்.
இந்நிலையில், 31 மீனவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று அறிவித்தது.
அத்துடன், மேலும் 29 மீனவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் 31 பேரை தொடர்ந்தும் தேடி வருவதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டிருந்தது.
இவ்வாறு உயிரிழந்த மீனவர்களில் பெரும்பாலானவர்கள் பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, அப்பிரதேசத்தைச் சேர்ந்த 16பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையிலேயே இன்று காலை மேலும் 11பேரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
இதேவேளை, மேலும் சில மீனவர்களின் சடலங்கள் கடலில் மிதந்துகொண்டிருப்பதாகவும் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பலபிட்டிய பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழப்பு 41ஆக அதிகரிப்பு
கடும் காற்றுடனான வானிலையால் ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழந்த 41 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அஹுங்கல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மாத்திரம் 10 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவற்றில் ஏழு சடலங்கள் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தினை அண்மித்த கடற்கரையில் இன்று இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
இவை தெஹிவளை மற்றும் மொறட்டுவை பகுதியைச் சேர்ந்தவர்களின் சடலங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த சடலங்கள் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை காணாமற்போன மீனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

ad

ad