புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2013

ராஜினாமாவை திரும்ப பெற அத்வானி நிபந்தனை?
பாஜகவில் இருந்து விலகியதை மறுபரிசீலனை செய்யுமாறு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானியை சந்தித்து வலியுறுத்தினர். ஆனால் தனது நிலையை மாற்றிக்கொள்ள அத்வானி மறுத்துவிட்டார். தங்களது முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, ஆலோசனையில் ஈடுபட்டனர் பாஜக மூத்த தலைவர்கள். டெல்லியில் உள்ள பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் அவர்கள்
ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே அத்வானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி. அப்போது ராஜினாமாவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 
சங் பரிவார் அமைப்புகள் கட்சியில் தலையிடுவதை நிறுத்தும் வரை, எனது முடிவை கைவிட மாட்டேன் என அத்வானி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
மேலும், மோடிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது பற்றி பிரச்சனை இல்லை. கட்சியில் எடுக்கப்படும் முடிவுகள் உரிய முறையில் எடுக்கப்பட வேண்டும். கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ஆர் எஸ் எஸ் அமைப்பின் கைகளுக்கு கட்டுப்பட்ட கருவியாக உள்ளார். ஆர் எஸ் எஸ் மற்றும் வி.எச்.பி., அமைப்புகள் கட்சிக்கு உத்தரவிடக்கூடாது என அத்வானி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ad

ad