தென் சூடானில் உள்நாட்டு போர் உச்ச கட்ட நிலையை அடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.
தலைநகர் ஜுபாவில் ஆரம்பமான வன்முறை மோதல்கள் நாடளாவிய ரீதியில் பரவியுள்ள நிலையிலேயே அவரது எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
தென் சூடானிலுள்ள அமெரிக்க பிரஜைகளை பாதுகாக்கும் முகமாக 45 இராணுவ உத்தியோகத்தர்கள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பராக் ஒபாமா தெரிவித்தார்.
கடந்த வாரத்திலிருந்து அந்நாட்டில் குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
முன்னாள் உப ஜனாதிபதி றெயிக் மாசரே அங்கு இடம்பெற்று வரும் வன்முறைகளுக்கு காரணமென ஜனாதிபதி சல்வா கிர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மோதல்கள் காரணமாக அந்நாட்டிலுள்ள ஐக்கிய நாடுகள் வளாகத்தில் சுமார் 34,000 பேர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
தென் சூடானின் கிழக்கு எல்லைக்கு அண்மையில் அகதிகள் தங்கியிருந்த ஐக்கிய நாடுகள் தளமொன்றின் மீது வியாழக் கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்திய சமாதான படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலையடுத்து அகொபோ ஜொங்லேயி மாநிலத்திலுள்ள மேற்படி ஐக்கிய நாடுகள் வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை அங்கிருந்து தனது உத்தி
தலைநகர் ஜுபாவில் ஆரம்பமான வன்முறை மோதல்கள் நாடளாவிய ரீதியில் பரவியுள்ள நிலையிலேயே அவரது எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
தென் சூடானிலுள்ள அமெரிக்க பிரஜைகளை பாதுகாக்கும் முகமாக 45 இராணுவ உத்தியோகத்தர்கள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பராக் ஒபாமா தெரிவித்தார்.
கடந்த வாரத்திலிருந்து அந்நாட்டில் குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
முன்னாள் உப ஜனாதிபதி றெயிக் மாசரே அங்கு இடம்பெற்று வரும் வன்முறைகளுக்கு காரணமென ஜனாதிபதி சல்வா கிர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மோதல்கள் காரணமாக அந்நாட்டிலுள்ள ஐக்கிய நாடுகள் வளாகத்தில் சுமார் 34,000 பேர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
தென் சூடானின் கிழக்கு எல்லைக்கு அண்மையில் அகதிகள் தங்கியிருந்த ஐக்கிய நாடுகள் தளமொன்றின் மீது வியாழக் கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்திய சமாதான படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலையடுத்து அகொபோ ஜொங்லேயி மாநிலத்திலுள்ள மேற்படி ஐக்கிய நாடுகள் வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை அங்கிருந்து தனது உத்தி