வடக்கு ஆளுநரை மாற்றும் விடயத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் அழுத்தம்
வட மாகாண ஆளுநர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. இதில் யாருடைய பரிந்துரைகளும் அரசாங்கத்திற்கு அவசியமில்லை என தெரிவிக்கும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வடக்கின் ஆளுநர் யார் என்பதை தெரிவு செய்ய சி.வி. விக்கினேஸ்வரன் யார் எனவும் கேள்வி எழுப்பினார்.
வட மாகாண ஆளுநராக மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வட மாகாண முதல்வர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பினை தெரிவித்திருக்கும் நிலைமையில் அது தொடர்பில் அரசாங்க பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவிடம் வினவிய போதே அக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்
பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்;
இலங்கையின் அரசியல் யாப்பின்படி ஆளுநரின் நியமனத்தை செய்வது இந்த நாட்டின் ஜனாதிபதியே இதில் எவரினது தனிப்பட்ட தலையீடும் ஏற்படுத்த முடியாது. இத வடமாகாணத்திற்கு மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் பொருந்தும். தற்போது வட மாகாணத்திற்கான ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பது ஜனாதிபதியின் தெரிவாகும். இதை எவரும் எதிர்க்கவோ குற்றம் சுமத்தவோ உரிமை இல்லை.
வடக்கிற்கு கூட்டமைப்பு சார்பில் ஒருவரை நியமித்து வடக்கை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கலாம் என்ற முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. இதில் சர்வதேச புலம்பெயர் அமைப்புகளின் அழுத்தமும் உள்ளது. இலங்கையில் எவ்வாறானதொரு ஆட்சி அமைய வேண்டும் என சர்வதேசம் தீர்மானிக்க முடியாது. ஆனால் சர்வதேசத்திற்கு ஏற்ற வகையில் இலங்கையில் ஆட்சி அமைய வேண்டும் என பலர் முயற்சிக்கின்றனர்.
குறிப்பாக வடக்கில் மீண்டும் பழைய நிலைமைகளை ஏற்படுத்தி மீளவும் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியிலேயே வடக்கின் முதல்வர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முயற்சிக்கின்றனர். அதற்கு இடம் கொடுத்து அவர்களின் ஆணையைநிறைவு செய்ய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.
வடக்கில் ஆளுநராக யாரை நியமிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்போ வட மாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரனோ தீர்மானிக்க முடியாது. வட மாகாண சபை வடக்கு மக்களின் ஆதரவுடன் செயற்படவில்லை. வடக்கு மக்களின் தேவைகளும் கோரிக்கைகளும் வேறு. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளும் வட மாகாண சபையின் செயற்பாடுகளும் வேறு விதமானது. நாட்டை பிரித்து வட மாகாணத்தை தனி நாடாக்கும் முயற்சியிலேயே தமிழ்த் தலைவர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இருந்தது. அதை முறியடித்து இன்று ஒற்றுமையினை ஏற்படுத்தியுள்ளோம்.
இப்போது இலங்கை விடயத்தில் சர்வதேசத்தை நுழையவிட்டு தீர்வுகாண நினைப்பது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
எனவே, வட மாகாண ஆளுநர் தெரிவு விடயத்தில் அரசாங்கத்தின் முடிவு மிகச்சரியானது எனவும் அவர் தெரிவித்தார்.
வட மாகாண ஆளுநராக மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வட மாகாண முதல்வர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பினை தெரிவித்திருக்கும் நிலைமையில் அது தொடர்பில் அரசாங்க பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவிடம் வினவிய போதே அக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்
பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்;
இலங்கையின் அரசியல் யாப்பின்படி ஆளுநரின் நியமனத்தை செய்வது இந்த நாட்டின் ஜனாதிபதியே இதில் எவரினது தனிப்பட்ட தலையீடும் ஏற்படுத்த முடியாது. இத வடமாகாணத்திற்கு மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் பொருந்தும். தற்போது வட மாகாணத்திற்கான ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பது ஜனாதிபதியின் தெரிவாகும். இதை எவரும் எதிர்க்கவோ குற்றம் சுமத்தவோ உரிமை இல்லை.
வடக்கிற்கு கூட்டமைப்பு சார்பில் ஒருவரை நியமித்து வடக்கை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கலாம் என்ற முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. இதில் சர்வதேச புலம்பெயர் அமைப்புகளின் அழுத்தமும் உள்ளது. இலங்கையில் எவ்வாறானதொரு ஆட்சி அமைய வேண்டும் என சர்வதேசம் தீர்மானிக்க முடியாது. ஆனால் சர்வதேசத்திற்கு ஏற்ற வகையில் இலங்கையில் ஆட்சி அமைய வேண்டும் என பலர் முயற்சிக்கின்றனர்.
குறிப்பாக வடக்கில் மீண்டும் பழைய நிலைமைகளை ஏற்படுத்தி மீளவும் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியிலேயே வடக்கின் முதல்வர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முயற்சிக்கின்றனர். அதற்கு இடம் கொடுத்து அவர்களின் ஆணையைநிறைவு செய்ய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.
வடக்கில் ஆளுநராக யாரை நியமிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்போ வட மாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரனோ தீர்மானிக்க முடியாது. வட மாகாண சபை வடக்கு மக்களின் ஆதரவுடன் செயற்படவில்லை. வடக்கு மக்களின் தேவைகளும் கோரிக்கைகளும் வேறு. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளும் வட மாகாண சபையின் செயற்பாடுகளும் வேறு விதமானது. நாட்டை பிரித்து வட மாகாணத்தை தனி நாடாக்கும் முயற்சியிலேயே தமிழ்த் தலைவர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இருந்தது. அதை முறியடித்து இன்று ஒற்றுமையினை ஏற்படுத்தியுள்ளோம்.
இப்போது இலங்கை விடயத்தில் சர்வதேசத்தை நுழையவிட்டு தீர்வுகாண நினைப்பது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
எனவே, வட மாகாண ஆளுநர் தெரிவு விடயத்தில் அரசாங்கத்தின் முடிவு மிகச்சரியானது எனவும் அவர் தெரிவித்தார்.