புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2015

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று! இலங்கை தொடர்பாக பல அமைப்புக்கள் அறிக்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த அமர்வில் இலங்கை குறித்து ஆராய்வதற்காக பல மனித உரிமை அமைப்புகளும், அரச சார்பற்ற அமைப்புகளும் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.
இலங்கை குறித்த அறிக்கைகளை சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம், சர்வதே மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஆசிய மன்றம் உட்பட பல அமைப்புகள் சமர்ப்பித்துள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த போதிலும், இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் பாதிக்கப்படுகின்றன என சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை சீர்திருத்தவென அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட புனர்வாழ்வுத் திட்டம் குறித்து அந்த அமைப்பு கரிசனை வெளியிட்டுள்ளது.
மேலும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் குறிப்பிடும் விதத்தில் தேசிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுப்பதன் மூலமாக இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளுக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 2014ம் ஆண்டில் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டனர்.
இலங்கையின் புதிய அரசாங்கம் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை பணியாளர்களுக்கு எதிரான கடந்தகால சம்பவங்கள் குறித்து விசாரிப்பதாக சாதகமான உறுதிமொழியை வழங்கியுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஆசிய மன்றம் தெரிவித்துள்ளது.
இந்த சாதகமான உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் காணப்படுகின்ற தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரம் முடிவிற்கு வருமா என்பது தெரியவில்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,  ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவும், மனித உரிமை ஆணையாளர் அலுவலகமும் இலங்கையின் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.
தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருமாறு அதனை கோரவெண்டும் எனவும் மனித உரிமைகளுக்கான ஆசிய மன்றம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் புதிய அரசாங்கம் அளித்துள்ள உத்தியோகபூர்வ வாக்குறுதிகளை வரவேற்றுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை அரசாங்கம் இந்த வாக்குதிகளை செயற்பாடுகளாக மாற்றும் அதன் மூலம் இலங்கையில் ஓரு தசாப்த காலமாக சட்டத்தின் ஆட்சிக்கும்,மனித உரிமைகளுக்கும் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ad

ad