புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2016

இலங்கை டாக்டர் குடும்பம் 17 வயது யுவதியுடன் அவுஸ்திரேலியாவில் தகாத உறவு அம்பலம்

dr.sl

கணவரை கொலை செய்தார் இலங்கையரான டாக்டர் சமரி லியனகே – அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் அரச தரப்பு சட்டத்தரணி வாதம்

அவுஸ்­தி­ரே­லி­யாவில் மருத்­து­வ­ரான தனது கண­வரை படுக்­கையில் வைத்து கொலை செய்த இலங்­கை­ய­ரான பெண் மருத்­துவர், தானும் தனது கண­வரும் யுவ­தி­யொ­ரு­வருடன் இணைந்து கூட்­டாக பாலியல் உறவில் ஈடு­பட்­டதை மறைப்­ப­தற்­கா­கவே இக்­ கொ­லையைச் செய்தார் என அவுஸ்தி­ரே­லிய நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
டாக்டர் சமரி லிய­னகே (35)எனும் இப் பெண், தனது கண­வ­ரான டாக்டர் தினேந்­திர அத்­து­கோ­ர­ளவை (34) 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்­தா­ரெனக் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார்.
மேற்கு அவுஸ்­தி­ரே­லிய மாநில தலை­நகர் பேர்த்­துக்கு வடக்­கி­லுள்ள ஜெரால்ட்டன் நக­ரி­லுள்ள இத்­ தம்­ப­தியின் வீட்டில் மேற்­படி சம்­பவம் இடம்­பெற்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இது தொடர்­பான வழக்கு மேற்கு அவுஸ்­தி­ரே­லிய உயர் நீதி­மன்­றத்தில் நடை­பெ­று­கி­றது.
நேற்­று முன்­தினம் திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணையில், அரச தரப்பு சட்­டத்­த­ர­ணி­யான நிக்கோகின் தனது வாதத்தை முன்­வைத்த­போது, “தினேந்­திர அத்­து­ கோரள அடிக்­கடி தனது மனைவி மற்றும் ஏனைய பெண்­க­ள் சகிதம் மூன்று பேராக இணைந்து பாலியல் உறவில் ஈடு­ப­டு­வ­தற்கு விரும்­பு­பவர்.
இதனால், இத்­ தம்­ப­தி­யினர் 17 வய­தான யுவ­தி­யொ­ரு­வ­ருடன் இணைந்து பாலியல் உறவை ஆரம்­பித்­தனர்” எனத் தெரிவித்தார்.
“டாக்டர் சமரி லிய­னகே, தனது கணவர் மற்றும் மேற்­படி 17 வயது யுவ­தி­யுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­டதன் பின்னர், இவ்­வி­டயம் குறித்து அவர் விச­ன­ம­டைந்­தி­ருந்தார்.
யுவ­தி­யொ­ரு­வ­ருடன் தானும் தனது கண­வரும் பாலியல் உறவில் ஈடு­பட்ட விட­யத்தை கணவர் அம்­ப­லப்­ப­டுத்­தினால் அது தனது தொழிற்சார் வாழ்க்­கைக்கு பெரும் பாதிப்­பாக அமையும் என சமரி லிய­னகே அச்சம் கொண்­டி­ருந்தார்.
இந்த அச்சம் கார­ண­மாக, சுத்­தியல் ஒன்­றினால் கணவர் தினேந்­திர அத்­து­கோ­ர­ளவை சமரி லிய­னகே தாக்கி கொலை செய்­தா­ரென சட்டத்­த­ரணி நிக் கோகின் நீதிமன்றில் கூறினார்.
2014 ஜூன் மாத்தில் ஒருநாள் அதிகாலை வேளையில் சமரி லிய­னேயின் தொலை­பேசி அழைப்பு கிடைத்­த­தா­கவும் அதி­காலை 6.18 மணி­ய­ளவில் பொலிஸார் அவ்­ வீட்டை சென்­ற­டைந்­த­தா­கவும் நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.
மெத்தையில் இரத்தம் வழிந்­தோ­டிய நிலையில், தினேந்­திர லிய­னேயின் சட­லத்தை பொலிஸார் கண்­டனர்.
அவ்­ வீட்டை அடைந்த முதல் பொலிஸ் குழுவில் இடம்­பெற்­றி­ருந்த அதி­கா­ரி­யான மெத்­தியூகேர்லி சாட்­சி­ய­ம­ளிக்­கையில், “என்ன நடந்­தது என நான் (சமரி லிய­ன­கே­யிடம்) கேட்டேன். தனக்கு எதுவும் தெரி­ய­வில்லை என அவர் பதி­ல­ளித்தார்” என்றார்.
கட்­டி­லுக்கு அருகில் சுத்­தியல் ஒன்றை தான் கண்­ட­தா­கவும் அப் பொலிஸ் அதி­காரி கூறினார்.
மேற்­படி சுத்­தியல் 1.79 கிலோ­கிராம் எடை­யு­ட­டை­யது என நீதிமன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
பிர­தி­வா­தி­யான டாக்டர் சமரி லிய­ன­கேயின் சட்­ட­த்­தரணி வாதிடு­கையில், தனது கட்­சிக்­காரர், துன்­பு­றுத்­தப்­பட்­டு உறக்­க­மற்ற துயரம் கொண்ட நெருக்­க­டியில் சிக்­கிய ஒரு பெண் எனத் தெரி­வித்தார்.
“அவரின் கணவருக்காக கெமராவுக்கு முன்னால் ஒரு மொடல் போன்று செயற்பட வேண்டியிருந்தது. சிலவேளைகளில் பல மணித்தியாலங்கள் இது நீடித்தது” என்றார்.
தனது கணவரை கொலை செய்தமை தொடர்பான குற்றச்சாட்டை டாக்டர் சமரி லியனகே நிராகரித்துள்ளார். இவ் வழக்கு விசாரணை தொடர்கிறது.dr.sl01

ad

ad