இலங்கையில் பொதுப் போக்குவரத்தின்போது, பெண்களில் 90 சதவீதமானவர்கள் பாலியல் தொந் தரவுகளுக்கு
உள்ளாவதாக ஐ.நா. சனத்தொகை நிதியம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.வன்முறை, வேறுபாடுகளுக்குள்ளாவது, வறுமை என்பதால் புரிந்து கொள்ளப்பட்ட பிரச்சினைகள், இலங்கையை போலவே உலக நாடுகளிலும் பெண்கள் பாலியல் ரீதியான பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் போதுமான தரவுகள் இல்லை.இந்தப் பிரச்சினைகள் பெண்கள் மற்றும் சிறிய பெண் பிள்ளைகளுக்கு மிகவும் பரீட்சயமானவை என்பதும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.பல சந்தர்ப்பங்களில் ஆண் பயணிகள் சிறிய பெண் பிள்ளைகளைத் தொடுவது, அவர்கள் மீது சாய்ந்து கொண்டிருப்பது போன்றவற்றை தான் நேரில் பார்த்திருப்பதாக 23 வயதான வருணி மானேல் தெரிவித்துள்ளார்.பேருந்து நடந்துநர்களும் சிறிய பெண் பிள்ளைகளைப் பேருந்தில் ஏற்றும் போது தேவையற்ற வகையில் தொடுவதையும் பார்த்துள்ளேன் எனவும் அவர் கூறியுள்ளார்.பெண்கள் மற்றும் சிறிய பெண் பிள்ளைகள் கல்வி கற்கும் இடங்கள், தொழில் புரியும் இடங்கள், வசிக்கும் இடங்கள் வரை இந்தத் தொந்தரவுகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வில் 15 வயது முதல் 35 வயதான 2 ஆயிரத்து 500 பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.நேர்காணல்கள், கேள்விகள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.பொதுப் போக்குவரத்து சாதனங்களிலேயே பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் அதிகளவான அனுபவத்தைக் கொண்டுள்ளனர். வாய்மொழி மூலமான ஆபாசமான அவமதிப்பு உள்ளாக்கப்படுவது.தன்னிச்சையான தொடுகை. இவற்றில் உடல் ரீதியான பாலியல் தொந்தரவுகளே அதிகம். 74 வீதமான பெண்கள் மற்றும் சிறிய பெண் பிள்ளைகள் தாம் வேண்டுமென்றே பாலியல் ரீதியான தொடுகைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.இதனால் தமக்கு ஏற்படும் அவமானம் மற்றும் அச்சம் குறித்து ஆய்வின்போது பெண்கள் விபரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாவதாக ஐ.நா. சனத்தொகை நிதியம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.வன்முறை, வேறுபாடுகளுக்குள்ளாவது, வறுமை என்பதால் புரிந்து கொள்ளப்பட்ட பிரச்சினைகள், இலங்கையை போலவே உலக நாடுகளிலும் பெண்கள் பாலியல் ரீதியான பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் போதுமான தரவுகள் இல்லை.இந்தப் பிரச்சினைகள் பெண்கள் மற்றும் சிறிய பெண் பிள்ளைகளுக்கு மிகவும் பரீட்சயமானவை என்பதும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.பல சந்தர்ப்பங்களில் ஆண் பயணிகள் சிறிய பெண் பிள்ளைகளைத் தொடுவது, அவர்கள் மீது சாய்ந்து கொண்டிருப்பது போன்றவற்றை தான் நேரில் பார்த்திருப்பதாக 23 வயதான வருணி மானேல் தெரிவித்துள்ளார்.பேருந்து நடந்துநர்களும் சிறிய பெண் பிள்ளைகளைப் பேருந்தில் ஏற்றும் போது தேவையற்ற வகையில் தொடுவதையும் பார்த்துள்ளேன் எனவும் அவர் கூறியுள்ளார்.பெண்கள் மற்றும் சிறிய பெண் பிள்ளைகள் கல்வி கற்கும் இடங்கள், தொழில் புரியும் இடங்கள், வசிக்கும் இடங்கள் வரை இந்தத் தொந்தரவுகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வில் 15 வயது முதல் 35 வயதான 2 ஆயிரத்து 500 பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.நேர்காணல்கள், கேள்விகள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.பொதுப் போக்குவரத்து சாதனங்களிலேயே பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் அதிகளவான அனுபவத்தைக் கொண்டுள்ளனர். வாய்மொழி மூலமான ஆபாசமான அவமதிப்பு உள்ளாக்கப்படுவது.தன்னிச்சையான தொடுகை. இவற்றில் உடல் ரீதியான பாலியல் தொந்தரவுகளே அதிகம். 74 வீதமான பெண்கள் மற்றும் சிறிய பெண் பிள்ளைகள் தாம் வேண்டுமென்றே பாலியல் ரீதியான தொடுகைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.இதனால் தமக்கு ஏற்படும் அவமானம் மற்றும் அச்சம் குறித்து ஆய்வின்போது பெண்கள் விபரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.