புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2021

பிரித்தானியாவில் பாரிய உணவு தட்டுப்பாடு! மக்கள் எதிர்நோக்கவுள்ள நெருக்கடி

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் இன்னும் இரண்டு வார காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவிட் பரவலுக்கு பிறகு பிரித்தானியாவின் பொருளாதார மீட்சியை சேதப்படுத்தும் வகையில் ரஷ்யா எரிவாயு விலைகளில் மாற்றம் செய்துள்ளமையே இவ்வாறான நிலை உருவாக காரணமெனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்பில் Gazprom நிறுவனம் மீது விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளதுடன்,மேலும் அமைச்சர்கள் குழுவும் சிக்கலைச் சமாளிக்க உணவு உற்பத்தியாளர்களுடன் அவசர பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இதுமட்டுமின்றி, உணவு உற்பத்திக்கான கார்பன் டை ஆக்சைடு பற்றாக்குறையால் நாட்டின் வடக்கில் இரண்டு உர ஆலைகள் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கோவிட் சோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சாரதிகள் பற்றாக்குறையால் உணவுப்பொருட்கள் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

மாமிச உணவு தொழிற் கூடங்களும் தற்போது கார்பன் டை ஆக்சைடு பற்றாக்குறை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீப மாதங்களாக ஐரோப்பாவில் எரிவாயு விலையில் உயர்வால், ஐரோப்பிய மின்சார செலவுகளை பல வருட உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன், இங்கிலாந்தில் மின்சார விலை திங்கள் அன்று இயல்பை விட 11 மடங்கு உயர்ந்து காணப்பட்டுள்ளது.

ad

ad